சர்க்கரை, பருப்பு, பலகாரமில்லாமல் தீபாவளிக் கொண்டாட்டம்- மாதர் சங்கம் நூதனப் போராட்டம்

தமிழக மக்கள் சர்க்கரையின்றி, பருப்பின்றி, பலகாரமின்றி பச்சைத் தண்ணியில் தீபாவளி கொண்டாட உள்ளனர் என மாதர் சங்கத்தினர் நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ரேசன் கடைகளில் பருப்பு, சர்க்கரை, எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உள்ளூர் மக்களின் தேவையை சிறிதும் நினைக்காமல் மத்திய அரசு அதிகளவில் வெளிநாடுகளுக்கு இத்தகையப் பொருட்களை ஏற்றுமதி செய்ததே இதற்குக் காரணம். மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்காலிக முதல்வர் பொறுப்பில் உள்ள பன்னீர்செல்வமும் மக்களின் நலனில் அக்கரை செலுத்தாமல் செயல்பட்டு வருகிறார்.

உடனடியாக அமைச்சரவை கூடி தீபாவளிக்கு முன்பு ரேசன் கடைகளில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், வெறும் நீரில் தான் இந்த தீபாவளியை கொண்டாட நேரிடும் என மாதர் சங்க மாநில துணைத் தலைவர் அமிர்தம் தலைமையில் மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்திபுரம், காட்டூர் பகுதியில் உள்ள அனைத்திந்திய இளைஞர் பெறுமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதில், கோவை மாவட்ட மாதர் சங்க தலைவர் அமுதா, செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...