பள்ளி மாணவிகள் எழுதி, இசையமைத்த டெங்கு விழிப்புணர்வு தொடர்பான பாடல் குறுந்தகடு வெளியீடு

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்ற கோவை எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவிகளான, அபிநயா மற்றும் அவரது சகோதரி 8-ம் வகுப்பு பயிலும் கல்யாணி ஆகிய இருவரும் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு தொடர்பான  பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலையும் பாடிய முதல் குறுந்தகடினை கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் அவர்கள் வெளியிட்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் கொசு புகை வண்டி மூலம் புகையடித்தல், கொசு மருந்து தெளித்தல், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று மழைநீர் தேங்கிக்கிடக்கும் குப்பை கழிவுகளில் அகற்றுதல், பள்ளி, கல்லூரி மற்றும் நர்சிங் மாணவர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமும் டெங்கு தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று கோவை  எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளான 10-ம் வகுப்பு பயிலும் அபிநயா மற்றும் அவரது சகோதரி 8-ம் வகுப்பு பயிலும் கல்யாணி ஆகிய இருவரும் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு தொடர்பான  பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலையும் பாடிய முதல் குறுந்தகடினை கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டார். மாநகராட்சி கல்வி அலுவலர் மூலம் மாநகராட்சி மற்றும் அனைத்து  பள்ளிகளுக்கும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சார குறுந்தகடுகளை வழங்கிட மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் அவர்கள் அறிவுறுத்தினார். 

உடன் துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி  தாளாளர் செல்வராஜ்,  முதல்வர் கீதா கோபிநாத், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த செல்வகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...