உலகில் மிக நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ்!

பாங்காக்: உலகில் மிக நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் என்னும் பெருமை பெற்ற தாய்லாந்து மன்னன் பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவசிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 88.

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும் நிர்வாகத்தின் தலைவராக மன்னரே இருந்து வருகிறார். இங்கு 1946ம் ஆண்டு ஜூன் 9ல் ஆட்சி பொறுப்பேற்ற பூமிபால் மன்னர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராக பதவி வகித்தவர்.

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் பிறந்த இவர்,பல நலத்திட்டங்களை நிறைவேற்றியதால் அவர் மீது தாய்லாந்து மக்கள் மிகுந்த அன்பு கொண்டு இருந்தனர். அவரது ஆட்சிக் காலத்தில் தாய்லாந்து பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்தது. இந்நிலையில், சிறுநீரக கோளாறு மற்றும் இதய பாதிப்பு காரணமாக, பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர்.

தாய்லாந்து மக்கள் நேற்று முதலே பூமிபால் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டு மன்னர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். பெண்கள் பிங்க் நிற ஆடை அணிந்து வந்து அவர் புகைப்படத்தை ஏந்தி பிரார்த்தனை செய்தனர். மன்னரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டதும் அவர்கள் கதறி அழுதனர். மன்னரின் இறப்புச் செய்தி தாய்லாந்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2008ல் மன்னரின் சகோதரி மரணமடைந்த போது அரசு 100 நாட்களை துக்க நாட்களாக அறிவித்தது. ஆனால் அவருக்கான இறுதிச்சடங்குகள் 10 மாதங்களுக்கு பிறகுதான் நடந்தது. இந்நிலையில் மன்னரின் இறப்பை அடுத்து தாய்லாந்தில் அடுத்த சில மாதம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே தாய்லாந்தின் புதிய மன்னராக மகா வஜ்ஜிரலாங்கோன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...