உலகில் மிக நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ்!

பாங்காக்: உலகில் மிக நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் என்னும் பெருமை பெற்ற தாய்லாந்து மன்னன் பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவசிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 88.

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும் நிர்வாகத்தின் தலைவராக மன்னரே இருந்து வருகிறார். இங்கு 1946ம் ஆண்டு ஜூன் 9ல் ஆட்சி பொறுப்பேற்ற பூமிபால் மன்னர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராக பதவி வகித்தவர்.

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் பிறந்த இவர்,பல நலத்திட்டங்களை நிறைவேற்றியதால் அவர் மீது தாய்லாந்து மக்கள் மிகுந்த அன்பு கொண்டு இருந்தனர். அவரது ஆட்சிக் காலத்தில் தாய்லாந்து பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்தது. இந்நிலையில், சிறுநீரக கோளாறு மற்றும் இதய பாதிப்பு காரணமாக, பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர்.

தாய்லாந்து மக்கள் நேற்று முதலே பூமிபால் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டு மன்னர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். பெண்கள் பிங்க் நிற ஆடை அணிந்து வந்து அவர் புகைப்படத்தை ஏந்தி பிரார்த்தனை செய்தனர். மன்னரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டதும் அவர்கள் கதறி அழுதனர். மன்னரின் இறப்புச் செய்தி தாய்லாந்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2008ல் மன்னரின் சகோதரி மரணமடைந்த போது அரசு 100 நாட்களை துக்க நாட்களாக அறிவித்தது. ஆனால் அவருக்கான இறுதிச்சடங்குகள் 10 மாதங்களுக்கு பிறகுதான் நடந்தது. இந்நிலையில் மன்னரின் இறப்பை அடுத்து தாய்லாந்தில் அடுத்த சில மாதம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே தாய்லாந்தின் புதிய மன்னராக மகா வஜ்ஜிரலாங்கோன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...