பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி, முதியவர் கைது

கோவை பீளமேடு பகுதியை அடுத்த காமராஜர் நகரை சேர்ந்தவர் மயில்சாமி. நேற்று மாலை இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றார். இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு திரும்பும் போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. சுதாரித்து கொண்ட மயில்சாமி, அக்கம் பக்கத்தினரை அழைத்துக்கொண்டு, வீட்டிற்குள் மெதுவாக சென்றார். அப்போது, வீட்டிற்குள் இருந்த நபர் பீரோவை உடைக்க முயன்று கொண்டிருந்தார். இதை பார்த்த மயில்சாமி அவரை கையும், களவுமாக பிடித்து பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தர். விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த குமார் (64) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...