ஓசையின் சார்பில் நடைபெற்ற 13வது காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி இன்று நிறைவு பெற்றது

தன்னார்வலர் அமைப்பான ஓசையின் சார்பில் கோவை கோட்ட தமிழ்நாடு அரசு வனத்துறை, மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து 13வது காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அக்டொபர் 4ம் தேதி முதல் தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற்றது. 

இந்தக் கண்காட்சியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகு, அரியவகை பறவை மற்றும் விலங்கு இனங்கள், வண்ணத்து பட்டாம்பூச்சி உள்ளிட்டவற்றின் புகைப்படங்களும், மனித விலங்கு மோதல் குறித்தான படங்களும் இடம்பெற்றிருந்தன. உயிர் நிழல் 2016 என்ற இந்நிகழ்ச்சியின் தொடக்க நாள் முதல் அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து கண்டு ரசித்துச் சென்றனர். 

இந்தக் கண்காட்சியின் நிறைவு நாள் அக்டோபர் 9ம் தேதி (இன்று) கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு. இராமசாமி தலைமையில் நடைபெற்ற இதில், வேளாண்மை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சக்திவேல் வரவேற்புரை வழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஓசை அமைப்பின் அமைப்பாளர் ச. அகிலா நன்றியுரை வழங்கினார்.

முன்னதாக கண்காட்சி நாட்களில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, விடாடி வினா, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வெற்றிபெற்றோர்க்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...