ஒரே நாளில் ரூ.1400 கோடிக்கு விற்பனை: பிலிப்கார்ட் சாதனை

புதுடில்லி: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட், பண்டிகை காலத்தை முன்னிட்டு "பிக் பில்லியன் டே" விற்பனையை அக்டோபர் 3ம் தேதி நடத்தியது. இதில் ஒரே நாளில் ரூ.1400 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஒரே நாளில் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிகமானவர்கள் ஆர்டர் செய்ததன் காரணமாக இந்த அளவிற்கு விற்பனை அதிகரித்ததாகவும், 2015ம் ஆண்டு 5 நாட்களில் ரூ.2000 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் பிலிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல புதிய வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கியதன் காரணமாக இந்த வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக பிலிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.

அதிக வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் புக் செய்தாலும் டிராபிக், லோடிங் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பிலிப்கார்ட் நிறுவனம் முன்னேற்பாடுகளை செய்திருந்தது. இதனால் எந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் எட்ட முடியாத விற்பனை சாதனையை பிலிப்கார்ட் நிகழ்த்தி உள்ளதாக அதன் தலைவர் அரவிந்த் சிங்கால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இனி வரும் காலங்களில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை கால சலுகை அறிவிக்கப்பட்ட பிறகு பிலிப்கார்ட்டில் 40 மில்லியன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு பண்டிகை கால விற்பனையில் 80 மில்லியனுக்கும் அதிகமான பொருட்களை விற்பனை செய்து 3 மடங்கு அதிகமாக விற்பனை சாதனையை அமேசான் நிறுவனம் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....