இரவில் மழை பெய்யும்: வானிலை மையம்

சென்னை: மத்திய மேற்கு வங்க கடலில், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யும் என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இயல்பை விட மழை அளவு குறைவு:

தென்மேற்கு பருவமழை காலம் முடிய போகிறது. ஆனால் இந்த பருவத்தில், தமிழகத்திற்கு இயல்பை விட, மழை அளவு குறைந்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. தென் மாவட்டங்களில், நிலத்தடி நீரின் அளவும் சரிந்துள்ளது; அதனால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

லேசான மழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல், சில இடங்களில் மழை பெய்தது. திண்டுக்கல்லில், அதிகபட்ச மழை பெய்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, மத்திய மேற்கு வங்க கடலில், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனால், இரவு நேரங்களில் கடலோர வட மாவட்டங்களில் மழை பெய்யும்; இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...