இரவில் மழை பெய்யும்: வானிலை மையம்

சென்னை: மத்திய மேற்கு வங்க கடலில், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யும் என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இயல்பை விட மழை அளவு குறைவு:

தென்மேற்கு பருவமழை காலம் முடிய போகிறது. ஆனால் இந்த பருவத்தில், தமிழகத்திற்கு இயல்பை விட, மழை அளவு குறைந்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. தென் மாவட்டங்களில், நிலத்தடி நீரின் அளவும் சரிந்துள்ளது; அதனால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

லேசான மழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல், சில இடங்களில் மழை பெய்தது. திண்டுக்கல்லில், அதிகபட்ச மழை பெய்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, மத்திய மேற்கு வங்க கடலில், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனால், இரவு நேரங்களில் கடலோர வட மாவட்டங்களில் மழை பெய்யும்; இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...