சிரியாவில் திருமண விழாவில் தற்கொலைப்படை தாக்குதல்; 32 பேர் பலி

பெய்ரூட்: சிரியாவிலுள்ள டால்டவில் எனும் கிராமத்தில் திருமண விழாவில் பயங்கரவாதி ஒருவன் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.

தற்கொலைப்படை தாக்குதல்:

சிரியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள டால்டவில் எனும் கிராமத்தில் நடந்த திருமண விழாவில் நுழைந்த பயங்கரவாதி, மணமக்கள் திருமணத்துக்கான உறுதி மொழிகளை எடுத்து கொண்டிருக்கும் போது, தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 32 பேர் பலியாயினர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (அக்.,3) நள்ளிரவில் நடந்துள்ளது.

ஐ.எஸ்., பொறுப்பேற்பு:

இத்தற்கொலைப்படை தாக்குதலில் மணமக்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தை சேர்ந்த போராளி, துப்பாக்கிச்சூடு நடத்தி, பின் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து 40க்கும் மேற்பட்டோரை கொன்றதாக தெரிவித்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...