சிரியாவில் திருமண விழாவில் தற்கொலைப்படை தாக்குதல்; 32 பேர் பலி

பெய்ரூட்: சிரியாவிலுள்ள டால்டவில் எனும் கிராமத்தில் திருமண விழாவில் பயங்கரவாதி ஒருவன் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.

தற்கொலைப்படை தாக்குதல்:

சிரியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள டால்டவில் எனும் கிராமத்தில் நடந்த திருமண விழாவில் நுழைந்த பயங்கரவாதி, மணமக்கள் திருமணத்துக்கான உறுதி மொழிகளை எடுத்து கொண்டிருக்கும் போது, தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 32 பேர் பலியாயினர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (அக்.,3) நள்ளிரவில் நடந்துள்ளது.

ஐ.எஸ்., பொறுப்பேற்பு:

இத்தற்கொலைப்படை தாக்குதலில் மணமக்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தை சேர்ந்த போராளி, துப்பாக்கிச்சூடு நடத்தி, பின் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து 40க்கும் மேற்பட்டோரை கொன்றதாக தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...