நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அளவீடு செய்து ஒப்படைக்கப்படாததால், சொந்த இடத்தில் குடியேற முடியாமல் வாடகை வீடுகளில் வசித்து வருவதாக 330 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மூர்த்தி ரெட்டிபாளையம், சகாயபுரம், நெய்க்காரம்பாளையம், பெரியார் நகர், சத்யா நகர், சாம்பவலசு, கோட்டை மாநகர், கள்ளிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 330 குடும்பங்களுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீரணம்பாளையம் கிராமத்தில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.



ஆனால், பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தும் இதுவரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அளவீடு செய்து ஒப்படைக்கவில்லை என பயனாளிகள் குற்றம்சாட்டினர். இதனால், பட்டா பெற்ற பின்னரும் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் குடியேற முடியாமல், வாடகை வீடுகளில் வசித்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே, தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை நிலங்களை உடனடியாக அளவீடு செய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, பட்டா பெற்ற பயனாளிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...