24 வயது பெண்ணின் உடல் உறுப்பு தானம் 5 பேருக்கு மறுவாழ்வு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த 24 வயது பெண்ணின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. கோயம்புத்தூர் நகரில் அம்மங்குளம் பகுதி சேர்ந்தவர் திருமதி பவித்ரா நந்தகுமார், 24 வயதான அவர். தனது கணவன் மற்றும் மூன்று மாத குழந்தையுடன் அக்டோபர் 2, 2016 அன்று காலை காந்திபுரம் அருகே பயணித்த போது சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அவர் தலையில் காயங்களுடன் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுவரப்பட்ட போது கோமா நிலையில் இருந்தார். விபத்து காரணமாக மூளை காயம் அடைந்து  மூளை சாவு ஏற்பட்டு ஆறு மணி நேர இடைவெளியில் அவர் இறந்தது டாக்டர்கள் குழுவால் உறுதி செய்யப்பட்டது. 

 ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் ராஜகோபால், நியூரோ அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கே செந்தில் குமார், தீவிர சிகிச்சை மருத்துவர், டாக்டர் கே அசோகன், நரம்பியல் நிபுணர், டாக்டர் பிரபா உதயகுமார், மயக்க மருந்து நிபுணர், ஆகியோர் கொண்ட உறுப்புகள் தான ஒருங்கிணைப்பாளர்கள் குழு உருவாக்கப்பட்டது. பின்னர் மருத்துவ குழுவினர் திருமதி பவித்ராவின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும்  இரண்டு கருவிழிகள் தானமாக பெற்று அகற்றினர்.  ஒரு சிறுநீரகம், கே.எம்.சி.எச்  மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கும் பொருத்தபட்டது. சங்கரா கண் மருத்துவமனைக்கு இரண்டு கருவிழிகள்  மற்றும் கல்லீரல் பிஸ்ஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...