ஈஷா யோகா மையத்தினரிடமிருந்து பாதுகாப்பு வேண்டி கிராமப்புற மக்கள் புகார்

கோவை, முள்ளாங்காடு பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள், ஈஷா யோகா மையத்தினரிடமிருந்து பாதுகாப்பு வேண்டி காவல் துறையினரிடம் இன்று புகார்  அளித்தனர்.

கோவை மாவட்டம், பேரூர் வட்டம் இக்கரை போளுவாம்பட்டி முள்ளாங்காடு பகுதியில் வன சாவடி எதிர்புறம் பல ஆண்டுகளாக வாழும் இருளர் வகுப்பினைச் சேர்ந்த பழங்குடியின மக்கள்  பயன்படுத்தி கொண்டிருக்கும் நிலங்களை தற்போது கடந்த ஒருவார காலமாக ஈஷா யோகா மையத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்த் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தை சேர்ந்த முகிலன், சுவாமி பசுவந்தா, சுவாமி சத்யா உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவன் தூண்டுதலின் பேரில் பல்வேறு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எனவே எங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஈஷா யோகா மையத்தினர் பொறுப்பு. தங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளித்து அவர்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...