நீலகிரியில் கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 1) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு (2016-2018) தலைவர் வி.செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து சட்டமன்றப் பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுத் தலைவர் பேசியதாவது, “உதகை கதரங்காடியினை சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.41.15 லட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத்திடவும், மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் அவர்களை கவர்ந்திடவும், கதர் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதன் மூலம் கதர் கிராமப்பொருட்களை பல்வேறு தரப்பினரும் அறிந்திடும் வகையில் உதகையில் நடமாடும் கதரங்காடி செயல்படுத்திட ரூ.35.29 இலட்சம் மதிப்பீட்டில் திட்ட எடுத்துரையும் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கதர் மற்றும் கிராமத் தொழில் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் ஆய்வுக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கதர் வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் இயங்கும் 12 கூட்டுறவு சங்கங்கள் ரூ.60 லட்சம் நிதியுதவில் புணரமைக்கப்பட்டுள்ளது. 68 சர்வோதய சங்கங்களுக்கு ரூ.34.74 கோடி தள்ளுபடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. பட்டு நெசவு செய்யும் கதர் வாரிய நெசவாளர்களுக்கு தறி உபகரணங்களை புதுப்பிக்க ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.” என்றார். 

இக்கூட்டத்தில் சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்பட்டஏடுகள் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...