புதுமைப் புகுத்தும் வேளான் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்

தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நான்காவது நாளாக கிணத்துக்கடவு ஊராட்சியில் நடைபெற்று வருகிறது. கோதவாடி குளம் அவ்வூர் மக்களுக்கு நன்னீர் தேக்கியாகப் பயன்பட்டு வந்தது. உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், குளத்தைச் சுற்றி களைப் பயிர்களும், குப்பைகளும் அதிகளவில் காணப்பட்டன. ஊர் மக்களின் நலன் கருதி, தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டமாணவர்கள் குளத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 



மற்றொரு மாணவர் குழு சட்டக்கல்புதூரில் மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். அப்பேரணியில் தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மதுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

கல்வி நிலையம் என்பது மாணவர்களுக்கு கற்றல் மீது உள்ள ஆர்வத்தைத் தூண்டும் இடமாக அமைய வேண்டும் என்பதில்  முழுமையான நம்பிக்கைக் கொண்டுள்ளது தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகம். அதன் அடிப்படையில் சொக்கனூரில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடத்தைச் செம்மைப் படுத்தும் விதமாக வெள்ளைப் பூச்சு அடிக்கப்பட்டது. 

நாளின் இறுதி நிகழ்வாக சொக்கனூர் பகுதியில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பேராசிரியர்களின் வழிக்காட்டுதலுடன் காளான் வளர்ப்பு, காய்கறிகள் அறுவடை தொழில்நுட்பம், மண்புழு உரம் பயன்பாடு குறித்த சிறப்பு விளக்கவுரை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அளிக்கப்பட்டது.

Newsletter

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...