கோவையில் தொழில் போட்டி காரணமாக வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் மோதல்

கோவையில் தற்போது வட மாநிலத்தை சேர்ந்த பலர் இங்கு பணி புரிந்து வருகின்றனர். குறைவான சம்பளம், தங்குமிடம், உணவு என அனைத்தும் வழங்கி இவர்களை தனியார் நிறுவனங்கள் பணி அமர்த்திகின்றனர். இவர்கள் வேலை செய்து தருவதால் கோவை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் ஆட்களை பணி அமர்த்துகின்றனர். இவ்வாறு நிறுவனங்களுக்கு ஆட்கள் சப்ளை செய்ய புரோக்கர்கள் அதிக அளவில் பெருகிவிட்டனர். கோவை சூலூர் அடுத்த அக்கநாய்க்கன்பட்டி பகுதிகளுக்கு ஆட்களை சப்ளை செய்யும் வேலையை வடமாநிலத்தவரான மனோ ரஞ்சன் திவாரி என்பவரும் ரஞ்சன் திவாரி என்பவரும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இருவர்க்கும் தொழில் போட்டி காரணமாக மோதல் ஏற்பட்டு மனோ ரஞ்சன் திவாரியை ரஞ்சன் திவாரி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி மனோ ரஞ்சன் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...