கோவை விமான நிலையத்தில் கூடுதல் பேக்கேஜ் ஸ்கேனர் அமைக்க பயணிகள் கோரிக்கை

அன்றாடம் பல்லாயிரம் மக்கள் வந்து செல்லும் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கேஜ்களை சோதனையிடும் கருவியானது பெரிய அளிவில் ஒன்றும், சிறிய அளவில் ஒன்றும் மட்டுமே உள்ளது.

இதில், பெரிய அளவிலான கருவி அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு கோளாராகிவிடுகிறது. இதற்கு மாற்றாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான ஸ்கேன் கருவியினை பயன்படுத்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, நீண்ட நேரம் பயணித்து சோர்வுடன் வரும் பயணிகளை இந்த ஸ்கேன் முறை மேலும் சோர்வடைய வைக்கும் வகையில் உள்ளது.

இதேப்போன்று கடந்த 21ம் தேதியன்று விமானம் மூலம் கோவை வந்த பயணிகளின் பொருட்களை ஸ்கேன் கருவியின் மூலம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருந்த போது அந்த இயந்திரம் பழுதானது. தொடர்ந்து, அதனை சீரமைக்க நீண்ட நேரம் ஆனதால் பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

எனவே, விமானத்துறை அதிகாரிகள் கோவை விமான நிலையத்திற்கு கூடுதலாக ஸ்கேன் கருவி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...