அத்திக்கடவு- அவினாசி திட்டம்: போராடிய மக்களுக்கு பயனற்றதாக மாற்றும் முதலமைச்சரின் புதிய திட்டம்

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தினை அமல்படுத்தக் கோரி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பல்வேறு வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தமிழக முதலமைச்சர் இத்திட்டத்திற்கான பாதைகளை மாற்றி அறிவித்திருப்பது போராடிவரும் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சமீபத்தில் மாநில சட்டசபைக் கூட்டத் தொடரின் போது அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் துவங்கப்படும் என அறிவித்தார். இதில், இத்திட்டம் 2017 டிசம்பரில் தொடங்கி அடுத்த 30 மாதங்களில் முடிவடையும் எனவும் அறிவித்தார்.

பல ஆண்டுகளாக இந்த திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு அளித்தனர். இருப்பினும், முதலமைச்சர் இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளை மாற்றி அறிவித்தது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. 

எதன் அடிப்படையில் இத்திட்டத்திற்கான பாதைகளை மாற்றினார்கள் என்ற சந்தேகம் இருந்தாலும் கோவையின் அன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களை இதில் இணைக்காமல் போனது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

அவினாசி - அத்திக்கடவு திட்டத்தில் மூன்று நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அவை அன்னூர், காலிங்கராயன் பாளையம் மற்றும் ஈராடு பெருந்துறையில் அமைக்கப்படவுள்ளன. இந்த மூன்று நீர் உந்து நிலையங்கள் இடையே பல்வேறு கிராமங்களில் நீர் பயணிக்கும். அதில் இருந்து மின்சாரம் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறு செல்லும் நீரானது அன்னூருக்கு உட்பட்ட பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு செல்லாமலேயே திட்டம் உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னூர் பகுதி மக்களின் நீண்ட கால போராட்டங்களுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதால் மீண்டும் பரிசீலனை செய்து திட்டத்தினை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார் பி.கே.செல்வராஜ் எனும் சமூக ஆர்வலர்.

"அவினாசி - அத்திக்கடவு திட்டத்தினை எதிர்பார்த்து இருந்த கிராமவாசிகளுக்கு நீர் வழங்கப்படாமல் திட்டத்தை மாற்றியது மிகப்பெரும் அநீதியாகும். இத்திட்டத்தினை மாற்றி அமைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலமாக தமிழக முதலமைச்சருக்கு எடுத்துரைக்க உள்ளதாகவும் பி.கே.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...