ஜமாத்துகள் ஒருங்கிணைப்பாளரை கடத்த முயன்ற வழக்கில் கிச்சான் புகாரி உள்ளிட்ட மூன்று நிதிமன்றத்தில் ஆஜர்

அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனாயத்துல்லாவை கடத்த முயற்சித்த சம்பத்தின் பின்னணியில்  வெடிகுண்டு வழக்கில் சிறையில் உள்ள அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் பாருக் கடந்த மார்ச் மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மத அடிப்படைவாதிகள் சதாம் உசேன், அகரம் ஜிந்தா, முனாப், அன்சாத், ஜாபர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பாருக்கினை கொலை செய்த 6 பேரின் குடும்பத்தினருக்கு உதவ அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனாயத்துல்லாவை பணம் கேட்டு கடத்திச் செல்ல கொலையாளிகளின் நண்பர்கள் திட்டமிட்டனர்.

இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் கடந்த மே மாதம் இனாயத்துல்லாவை கடத்த முயன்றதாக 8 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, இனாயத்துல்லா கடத்தல் முயற்சி வழக்கினை உக்கடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் பெங்களூர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி, ஜுல்பிக்கர் அலி, அஸ்கர்அலி ஆகியோர் மூளையாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மூவருக்கும் கடந்த 18-ம் தேதி கோவை காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் இன்று கிச்சான்புகாரி உள்ளிட்ட மூவரும் கோவை நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மூவரும் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நாளை காலை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாகாப்புடன் காவல்துறை வாகனத்தில் பெங்களூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர் .பாரூக் கொலையில் ஈடுபட்டவர்கள் கொலை சம்பவத்திற்கு முதல் நாள் பெங்களூர் சிறைக்கு சென்று கிச்சான் புகாரியை சந்தித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே பாரூக் கொலை வழக்கிலும் அல் உம்மா இயக்கத்தின் கிச்சன் புகாரி உள்ளிட்ட மூவரும் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...