அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017-க்கான கலந்தாய்வு சேர்க்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017-க்கான கலந்தாய்வு சேர்க்கையையொட்டி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தின் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் ஆனைகட்டி மற்றும் சில தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களுக்கு ஆகஸ்ட் - 2017 இரண்டாம் கட்ட கலந்தாய்வு சேர்க்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதற்கான கடைசி தேதி 10.08.2017 ஆகும். 

எனவே தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 10.08.2017 மாலை 5 மணிக்குள் பதிவு செய்து பயன்பெற தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பதாரர்களின் நலன் கருதி மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...