நீலகிரி பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்துவருவதைக் கண்டித்து பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம் உலிக்கல் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள உலிக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட உலிக்கல், திருவள்ளுவர் நகர், உலிக்கல் ஹட்டி ஆகிய பகுதிகளுக்கு பென்காம் எஸ்டேட் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் உலிக்கல் அருகே உள்ள கழிப்பிடம் அருகே குடிநீர் குழாய் பழுதடைந்துள்ளது. இதனை உலிக்கல் பஞ்சாயத்தில் பணிபுரியும் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணியளர்கள் முறையாக பராமரிக்காததால் அந்த கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடிநீருடன் கலந்து குழாய் வழியாக வருகின்றது.

இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று உலிக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...