விளாங்குறிச்சி பகுதியில் அனுமதியற்ற குடிநீர் விற்பனை மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் மனு

விளாங்குறிச்சி பகுதியில் அனுமதியற்ற குடிநீர் விற்பனை நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுவினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகராட்சி 32-வது வார்டு, விளாங்குறிச்சி கிராமத்தில் கனிஷ்கா வாட்டர்ஸ் என்ற பெயரில் சதீஸ் என்பவரால் நாள் ஒன்றுக்கு தற்போது ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிப்பதாக தெரிய வருகிறது. இந்நிறுவனம் தண்ணீர் விநியோகம் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள TN 38 BR 5913 லாரியினை பயன்படுத்தியும், மேலும், பல்வேறு லாரிகளின் மலம் தண்ணீர் விற்பனை செய்து வருவதும், உரிய உரிமம் இல்லை என்பதும் தெரியவருகிறது.

வர்த்தக ரீதியாக தண்ணீர் உறிஞ்சி விற்பதால் அருகில் உள்ள விவசாயிகளின் கிணறுகள் வற்றி விடுவதாலும் குடிநீர் பயன்பாட்டில் உள்ள பொதுக் கிணறுகளும் வற்றி விட்டன. 

எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்". இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...