ஓ.பி.எஸ் அணியின் மீது எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி விதிக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை- முன்னாள் அமைச்சர் செ.தாமோதிரன் விளக்கம்

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவரது குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான செ.தாமோதிரன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான செ.தாமோதிரன் இன்று செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தங்கள் அணியில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. அவரது குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. தனது தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக அணி மாறியதாக கூறும் ஆறுக்குட்டி, இதற்காக எதிர்கட்சியாக இருக்கும் போது ஆளுங்கட்சிக்கு செல்வாரா ?.

தமிழகத்தில் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மரியாதை அளிக்கும் ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம். இந்த தலைமையில் இருந்து ஆறுக்குட்டி வெளியேறியது வேதனை அளிக்கிறது. வழக்கு உள்ள அதிமுக அமைச்சர்கள் கைது செய்யப்படலாம். எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கேட்டு முதலமைச்சருக்கு தொல்லை கொடுத்து வருவதால் மேலும் கட்சி உடைய வாய்ப்புண்டு. இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும் என சொல்ல முடியாது. அணிகளாக அதிமுக பிளவுபட்டு இருப்பதால் பலமிழந்துவிடாது. இரு அணிகள் இணைய தற்போது வாய்ப்பில்லை. சசிகலா குடும்பத்தை வெளியேற்றினால் மட்டுமே இணைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்' என தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...