ஆடி அமாவாசையினை முன்னிட்டு முன்னோர்களை வழிபட நொய்யல் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்

ஆடி அமாவாசை நாளில் ஆறு, குளங்கள், கடற்கரைகளில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் ஈரோடு பவானி கூடுதுறை, கொடுமுடி, திருப்பூர் மாவட்டம் உடுமலை, பேரூர் நொய்யல் படித்துறை உள்ளிட்ட இடங்களில் புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். 



கோவை மாவட்டம், பேரூர் நொய்யல் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டில் இன்று ஈடுபட்டனர். ஆடிமாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை என்பதால் வழக்கத்தை விட இன்று பேரூர் கோவிலில் கூட்டம் அதிகளவிலேயே காணப்பட்டது. இதில், இறந்துபோன தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து எள், அரசி, சர்க்கரை, பழம் ஆகியன படையலிட்டு பூஜை செய்தனர். 



இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதலே திரளான பக்தர்கள் கோவை மாவட்டம், பேரில் உள்ள நொய்யல் படித்துறையில் திரண்டு இறந்துபோன முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபட்டு வருகின்றனர்.



தொடர்ந்து, திதி முடித்துவிட்டு செல்லும்போது ஏழைகளுக்கு அன்னதானம், பசுக்கன்றுகளுக்கு அகத்திக்கீரைகளை வழங்கிச் சென்றனர். இதனால் நொய்யல் படித்துறையில் பக்கதர்களின் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. 

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...