மதுக்கரையில் கால்நடைகளை வேட்டையாடும் நாய்கள் - பொதுமக்கள் வேதனை



கோவையில், மதுக்கரை பகுதிகளிலும் அதிகரித்து வரும் நாய்கள், பொதுமக்களின் கால்நடை வளர்ப்புப் பகுதிகளில் நுழைந்து அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடும் சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது. 

ஒரு கிராமப் பகுதியில் சில நூறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட அல்லது சாலையில் சுற்றித்திரியும் நாய்கள் காணப்படுகின்றன. அதுபோன்றே மரப்பாலம் அருகே உள்ள அம்பேத்கர் நகரிலும் பல நாய்கள் சுற்றி வருகின்றன. இவை சாலையோரம் உள்ள வீசப்பட்ட உணவுகளை, குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் உணவுகளை உணடு வாழ்ந்து வருகின்றன. இதில், சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால் அந்த நாய்களில் பல மக்களால் வளர்க்கப்பட்ட நாய்கள் ஆகும். அது அவற்றின் கழுத்தில் உள்ள பெல்ட்டின் மூலம் அடையாளம் காண முடிகிறது.



இப்பகுதியில் நாய்கள் அதிகமாக காணப்படும் நிலையில் அவற்றை வேட்டையாட ஒரு சிறுத்தையும் இங்கு வலம்வருகிறது. இதனால், மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 



இதனிடையே, கேரளாவில் மக்கள் வளர்த்து பின் கைவிடப்படும் நாய்கள் மதுக்கரைக்கு உட்பட்ட பகுதியிலேயே கொண்டுவந்து விடப்படுகின்றன. இந்த நாய்கள் இணைந்து ஒரு பெரும் கூட்டமாக உருவெடுத்துள்ளது. அவை மதுக்கரை மற்றும் செட்டிபாளையம் பிரிவில் அருகிலுள்ள பண்ணைகளில் நுழைந்து ஆடு, மாடுகள் மற்றும் கோழிகளை வேட்டையாடி வருகிறது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



சமீபத்தில், பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் அருகே உள்ள ஒரு பண்ணையில் நுழைந்து, மூன்று வெள்ளாடுகளைக் கொன்றது என்கின்றனர் மதுக்கரை வாசிகள். இப்பிரச்சனை கடந்த மூன்று மாதங்களாக அதிகரித்துள்ளது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த ராஜன். இதில், பாலக்காடு பகுதிமக்கள் வளர்த்து வந்த நாய்களை பின் இடையூறுகள் காரணமான மதுக்கரைக்கு கொண்டு வந்து விடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த கிராமத்தில் இதுவரை பத்து ஆடுகள் கொல்லப்பட்டிருக்கின்றன. ஐந்து கால்நடைகளுக்கும் மேல் தாக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நாய்களின் தாக்குதலுக்கு சுமார் 20 கோழிகளும் உயிரிந்துவிட்டன என்று அவர் கூறினார்.

மேலும், இந்த நாய்கள் அவ்வழியாக செல்லும் பயணிகளுக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...