கதிராமங்கலம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் பகுதிகளில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று கோவை கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், விவசாயிகளின் உரிமைக்காக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல் துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மாணவி வளர்மதியை உடனடியாக விடுவிக்கவில்லை எனில் அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...