மது பழக்கத்தில் இருந்து விடுபட கேஎம்சிஎச் மருத்துவமனையில் புதிய நவீன மருத்துவம்

இந்தியாவில் முதன் முறையாக கேஎம்சிஎச் மருத்துவமனையின் மருத்துவர்கள் மின்முனை இணைக்கப்பட்ட ஒரு பேஸ் மேக்கரை மூளையின் ஆழ்ந்த பகுதிகளுடன் தொடர்புகொள்ள பொருத்தினார்கள். இதற்கு ஆழ் மூளை தூண்டுதல் என்று பெயர். நடுக்குவாதம் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும், சிலவகையான வலிப்பு நோய்கள் மற்றும் பொதுவான நரம்பியல் இயக்கக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 55 வயது நபர் 2013 ஆம் ஆண்டிலிருந்தே மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அதில் இருந்து மீள்வதற்கு கோவை கேஎம்சிஎச் மருத்துவமனை வந்த அவரை மருத்துவர் அருள் செல்வன் பரிசோதனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு புதிய நவீன முறையிலான சிகிச்சையை மேற்கொள்ள கேஎம்சிஎச் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, நோயாளியின் மூளையில் ஆழ்ந்த பகுதியில் ஒரு மிகச்சிறிய மின்முனை இணைக்கப்பட்ட ஒரு பேஷ் மேக்கர் பொருத்தப்பட்டது. இந்த பேஸ்மேக்கரிலிருந்து தொடர்ந்து மின்சார சமிக்ஞைக்கள் அனுப்பப்படுகின்றன. இதனால், அவர் முற்றிலும் குணமடைந்தார்.



இதுகுறித்து, கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் நல்ல ஜி. பழனிசாமி கூறுகையில், புதுமையான மற்றும் புதிய சிகிக்சை முறைகளை மேற்கொள்வதிலும், அவற்றின் பயன்களை நிரூபிப்பதிலும் கேஎம்சிஎச் மருத்துவமனை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிறந்த மருத்துவ தொழில்நுட்பமும் நவீன வசதிகளும் இருக்கின்றன. நோயாளி மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...