மது பழக்கத்தில் இருந்து விடுபட கேஎம்சிஎச் மருத்துவமனையில் புதிய நவீன மருத்துவம்

இந்தியாவில் முதன் முறையாக கேஎம்சிஎச் மருத்துவமனையின் மருத்துவர்கள் மின்முனை இணைக்கப்பட்ட ஒரு பேஸ் மேக்கரை மூளையின் ஆழ்ந்த பகுதிகளுடன் தொடர்புகொள்ள பொருத்தினார்கள். இதற்கு ஆழ் மூளை தூண்டுதல் என்று பெயர். நடுக்குவாதம் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும், சிலவகையான வலிப்பு நோய்கள் மற்றும் பொதுவான நரம்பியல் இயக்கக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 55 வயது நபர் 2013 ஆம் ஆண்டிலிருந்தே மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அதில் இருந்து மீள்வதற்கு கோவை கேஎம்சிஎச் மருத்துவமனை வந்த அவரை மருத்துவர் அருள் செல்வன் பரிசோதனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு புதிய நவீன முறையிலான சிகிச்சையை மேற்கொள்ள கேஎம்சிஎச் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, நோயாளியின் மூளையில் ஆழ்ந்த பகுதியில் ஒரு மிகச்சிறிய மின்முனை இணைக்கப்பட்ட ஒரு பேஷ் மேக்கர் பொருத்தப்பட்டது. இந்த பேஸ்மேக்கரிலிருந்து தொடர்ந்து மின்சார சமிக்ஞைக்கள் அனுப்பப்படுகின்றன. இதனால், அவர் முற்றிலும் குணமடைந்தார்.



இதுகுறித்து, கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் நல்ல ஜி. பழனிசாமி கூறுகையில், புதுமையான மற்றும் புதிய சிகிக்சை முறைகளை மேற்கொள்வதிலும், அவற்றின் பயன்களை நிரூபிப்பதிலும் கேஎம்சிஎச் மருத்துவமனை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிறந்த மருத்துவ தொழில்நுட்பமும் நவீன வசதிகளும் இருக்கின்றன. நோயாளி மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...