கோவை மாநகராட்சி, (GIZ) என்கிற ஜெர்மன் அரசு நிறுவனம் இணைந்து நகர்புற போக்குவரத்து குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சியுடன் (GIZ) என்கிற ஜெர்மன் அரசு நிறுவனம் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகர்புற போக்குவரத்து மேம்படுத்துவது குறித்த முதற்கட்ட கலந்தாலோசனைக் கூட்டம் இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் தமிழக அரசு சிறப்பு செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆர்.ஜெயா தலைமையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டம் இந்திய அரசு - ஜெர்மன் அரசு நிறுவனம் (GIZ) இணைந்து தமிழ் நாட்டில் கோவையிலும், ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரிலும், கேரள மாநிலத்தில் கொச்சினிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதனடிப்படையில் நகர்புற போக்குவரத்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து நடைபெறும் முதற்கட்ட கலந்தாலோசனை கூட்டம் ஆகும்.

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகர்புற போக்குவரத்து மேம்படுத்துவது குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டது. அவை கோவை மாநகரில் நாளுக்கு நாள் ஏற்படும் வாகன பெருக்கத்தை மனதில் கொண்டு சாலை விரிவாக்கம் - ஸ்மார்ட் சாலைகள் அமைத்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

வாகனங்கள் நிறுத்துமிடம், மாசு கட்டுப்பாடு, ஒலி மாசு கட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சாலை விபத்துகள் தவிர்ப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதசாரிக்குரிய நடைபாதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், சைக்கிள் பாதை அமைத்தல் ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. இத்திட்ட வரைவு உருவாக்குவதற்கு பணி சார்ந்த துறைகளுடன் நன்கு கலந்தாலோசித்து முடிவெடுக்க தமிழக அரசு சிறப்பு செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆர்.ஜெயா அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, கோவை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா ஹரி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, போக்குவரத்துத்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், (GIZ) ஜெர்மன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...