கோடநாடு கொள்ளை வழக்கு- 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோடநாடு கொள்ளை வழக்கில் கைதான 5 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கும் திட்டத்துடன் நுழைந்த மர்மநபர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து தப்பிச் சென்றனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இதில் முதல் குற்றவாளியான கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, கைதான 10 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், குற்றவாளிகள் 10 பேரில் தீபு, உதயகுமார், சதீஷன், குட்டி பிஜின், மனோஜ் உள்ளிட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...