பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து தங்கள் பயிரினை காப்பீடு செய்து கொண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2016- 1017 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இக்காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2017-2018 ஆம் ஆண்டிலும் நடைமுறைக்கு வந்துள்ளதால் கோவை மாவட்டத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட, வருவாய் கிராமங்களைச் சேர்ந்த அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை நடப்பு காரிஃப் பருவத்தில் பயிரிட உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும், இத்திட்டம் கோவை மாவட்ட விவசாயிகளை சென்றடைய ஏதுவாக வேளாண்மைத் துறையினரால் கிராம அளவில் விளக்கக் கூட்டங்கள் நடத்தவும், வட்டார அளவில் தகவல் மற்றும் சேவை மையங்களை அமைத்து விவசாயிகளுக்கு இத்திட்டததில் சேர வேண்டிய உதவிகளை செய்யவும் மாவட்ட நிர்வாகத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...