வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையின் தொடக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா

கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள புறந்தரதாசர் மண்டபத்தில் வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையின் தொடக்க விழா நடைபெற்றது. அறக்கட்டளையின் அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகர் மற்றும் சிவக்குமார் ஆகியோர் விழாவினை துவக்கிவைத்தனர். விழாவில், எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 



விழாவில், முக்கிய நிகழ்வாக முதலில் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகையும் பின்பு நாளைய வரலாறு மற்றும் ஜன்னலில் வெளிவந்த ஆசிரியை பா.பிரபாவதி அவர்களின் குறுநகை பூக்கள் புத்தகம் வெளியிடப்பட்டது. அதனை எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் வெளியிட, சமூக ஆர்வலர் இளங்கோ பெற்றுக்கொண்டார். அடுத்தாக சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ரா.கனகராஜ்-யின் காணிக்கை புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை தன்னம்பிக்கை கவிஞர் கவிதாசன் வெளியிட, எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் மற்றும் பெரியமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் இளம் சாதனையாளர்களுக்கான விருதை ஜகதீஷ்க்கு வழங்கப்பட்டது.



விழாவில், சிறப்பு விருந்தினரான எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் பேசுகையில், அடித்தட்டு மக்களுக்கு சுகாதாரமான மருத்துவம், அத்தியாவசியமான கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் கிடைத்திட வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையும் உதவவேண்டுமென வந்த அனைவரையும் வியக்கும்படி பேசினார். இறுதியில் அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகர் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...