குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வெங்கய்யா நாயுடு

குடியரசு துணைத் தலைவர் போட்டி வரும் ஆக்ஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்து வரும் வெங்கய்யா நாயுடு-வை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த வெங்கய்யா நாயுடு கடந்த 2002 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்தார். 

கடந்த 2016-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வெங்கய்யா நாயுடு தற்போது குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த அறிவிப்பை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை வெளியிட்டார். 

வெங்கய்யா நாயுடு குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு சரியானவர் என்றும், நாளை காலை 11 மணிக்கு அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் செய்தியாளர்களிடம் அமித்ஷா தெரிவித்தார்.

வெங்கய்யா நாயுடுவை எதிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சி சார்பில் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...