கோவையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம்

கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெகு காய்ச்சலுக்கான சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக நிலவேம்பு கஷாயம் உள்ளது. தற்போது நிலவேம்பு கஷாயம் பொதுமக்களுக்கு வழங்குவது கோவையில் ஒருசில பகுதிகளில் துவங்கியுள்ளது. 



உக்கடம் தெற்கு பகுதியில் உள்ள பிலால் நகர், பொன்விழா நகர், அண்ணா நகர், ரோஸ் கார்டன், சாராமேடு மற்றும் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற சங்கம் சார்பில் 86-வது வார்டின் முன்னாள் கவுன்சிலர் சாதிக் அலி தலைமையில் வழங்கப்பட்டது.



பருவமழைக் காலங்களில், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்டவயின் அடிப்படையில் பரவும் இதுபோன்ற நோய்களை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மாவட்ட நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட அந்தந்தந்த உள்ளாட்சித்துறை பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோவை மாவட்டத்தில் பரவலாக பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...