கோவையில் திரையரங்கம் மீது கல்வீச்சு: இருவர் கைது

கோவை காந்திபுரத்தை அடுத்த ராம்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திரையரங்கம் செயல்பட்டுவருகிறது.

நேற்று மாலை திரையரங்கத்திற்கு மானமதுரை பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (22), சந்தோஷ் குமார் (25) ஆகிய இருவர் படம் பார்க்க சென்றனர்.

இந்நிலையில், குடிபோதையில் இருந்த இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை விட்டுவிட்டு வேறு இருக்கையில் அமர்ந்ததுடன் திரையரங்கிற்குள் படம் பார்ப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, அவர்கள் இருவரும் திரையரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் திரையரங்கின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி விட்டு ஓடினர். 

இது குறித்து திரையரங்கு நிர்வாகம் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, புகாரின் பேரில் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...