கோவையிலிருந்து கொழும்பு வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்து சேவை துவக்கம்


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கோவையிலிருந்து கொழும்பு வரை வாரத்தில் நான்கு நாட்கள் என கோவையில் விமான போக்குவரத்து சேவை துவங்கியுள்ளது. இந்தியாவில் 14வது நகரமாகவும், தென்மாநிலங்களில் உள்ள மூன்று நகரங்களில் கோவையிலும் இச்சேவை துவங்கியுள்ளது. இந்த வாரத்தில் விசாகபட்டினத்திலிருந்து ஜூலை 8ம் தேதியிலும், ஹைதரபாத்திலிருந்து ஜூலை 12ல் இருந்தும் துவங்கியுள்ளன. இதனுடன் இந்தியாவில் 14 நகரங்களுக்கு 126 விமானங்களை இயக்குகிறது. இதில் சென்னை, திருச்சி, திருவனந்தபுரம், மும்பை, புதுதில்லி, கயா, மதுரை, வாரணாசி, கொச்சி, பெங்களூர் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு முன்னதாகவே சேவையைக் கொண்டுள்ளது. 



இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி சிவா ராமச்சந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டின் அடுத்த துடிப்பான நகரமாக திகழும் கோவைக்கு எங்களது சேவையை துவக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களது வீட்டு வாசலிலிருந்து உலகத்தில் பல நாடுகள், நகரங்களுடன் தொடராக செல்ல, எளிய முறை பயணமாக இது அமையும். இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை வலுப்படுதவும், வர்த்தகத்தையும், சுற்றுலா, ஆன்மீக பயணம், உடல் நலம் மற்றும் கல்வி போன்றவற்றை மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக அமையும். 

இந்த விமான சேவை துவக்கத்துக்குபின், வர்த்தக சமுதாயத்தினரும், இந்தியாவின் தொழில் நகரமாக திகழும் கோவையின் ஜவுளி, பொறியியல், வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், உற்பத்தி என பல்வேறு தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும். இந்த விமான பயணம் செய்வோர் விருது பெற்ற இலங்கையின் விருந்தோம்பலை அனுபவிக்க முடியும். ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் புதிய ஏ321நியோ விமானங்கள் தென்னிந்தியாவுடன் இணைகிறது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.



விமானப் பயண நேரம்:

கொழும்பு - கோவை புறப்படும் நேரம்: 1:30 மதியம் சென்றடையும் நேரம்: 2:35.

கோவை - கொழும்பு புறப்படும் நேரம்: 3:35 மதியம் சென்றடையும் நேரம்: 4:45.

இயங்கும் நாட்கள்: செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...