சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு நடிகர் கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்- புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி



சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், நடிகர் கமல்ஹாசனும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மொழி, இனம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிப்படையில் தாழ்வுபடுத்தி பேசக்கூடாது என்ற பொதுவான நியதி இருந்தாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருவர் சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு. இந்தியாவில் சில மக்கள் சேரியில் வாழும் சூழலை ஏற்படுத்தியதற்கு மேல்தட்டு வர்க்கத்தினர் வெட்கப்பட வேண்டுமே ஒழிய, அவமானப்படுத்தக் கூடாது. இதற்கு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், நடிகர் கமல்ஹாசனும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.

நடிகர் கமல்ஹாசன் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பது குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, நடிகர் கலம்ஹாசன் ஊழல் குறித்து ஆதாரத்துடன் பேச வேண்டும். ஊழல் புகார் தொடர்பாக ஆதாரம் கொடுக்க வேண்டியது அவரது பொறுப்பு. 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ணகாந்திக்கு அனைவரும் ஆதாரவு கொடுத்தால் தவறல்ல'  என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...