சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு நடிகர் கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்- புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி



சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், நடிகர் கமல்ஹாசனும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மொழி, இனம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிப்படையில் தாழ்வுபடுத்தி பேசக்கூடாது என்ற பொதுவான நியதி இருந்தாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருவர் சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு. இந்தியாவில் சில மக்கள் சேரியில் வாழும் சூழலை ஏற்படுத்தியதற்கு மேல்தட்டு வர்க்கத்தினர் வெட்கப்பட வேண்டுமே ஒழிய, அவமானப்படுத்தக் கூடாது. இதற்கு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், நடிகர் கமல்ஹாசனும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.

நடிகர் கமல்ஹாசன் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பது குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, நடிகர் கலம்ஹாசன் ஊழல் குறித்து ஆதாரத்துடன் பேச வேண்டும். ஊழல் புகார் தொடர்பாக ஆதாரம் கொடுக்க வேண்டியது அவரது பொறுப்பு. 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ணகாந்திக்கு அனைவரும் ஆதாரவு கொடுத்தால் தவறல்ல'  என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...