கமல் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்படும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை


நடிகர் கமலஹாசன் ஆதாரம் இல்லாமல் அரசை விமர்சனம் செய்து வந்தால், அடுத்த கட்டமாக தமிழக அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்படுமென ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை, மேட்டுப்பாளையம் அருகே கல்லார் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இன்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். 

இதனைத்தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடிகர் கமலஹாசனின் தமிழக அரசு குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் குறித்து நடிகர் கமலஹாசன் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து நடிகர் கமலஹாசன் ஆதாரம் இல்லாமல் அரசை விமர்சனம் செய்து வந்தால், அடுத்த கட்டமாக அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்படுமெனவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுனன், எட்டிமடை எ.சண்முகம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சௌந்தரவேல், வருவாய் கோட்டாட்சியர் கோவை (வடக்கு) சின்னசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...