டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மேற்படி காய்ச்சல் பாதிப்பினை தடுத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பூரண ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பினை முழுமையாக ஒழிக்க முடியும் என கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதில், மக்கள் தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காவண்ணம் சுத்தமாக பராமரிக்க வேண்டும். சுற்றுப்புறத்தில் கொசுக்கள் உற்பத்தி செய்திட ஏதுவாக உள்ள டயர்கள், உரல்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் தொட்டிகள், உபயோகமற்ற பொருட்கள், பேப்பர் கப்கள் போன்ற பொருட்களை உடன் நீர் தேங்காச்செய்யாமல் செய்வதுடன் அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

வீட்டினை தூய்மையாக வைத்திடல் வேண்டும். வீட்டிற்குள் வைக்கப்படும் குடிநீரை சுத்தப்படுத்தி மூடி கொசு புகாதவாறு வைக்க வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் நீர் தேங்கி இருப்பதை உடனுக்குடன் சுத்தப்படுத்துதல் வேண்டும்.

சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கு ஆய்வு செய்ய வரும்போது உடனிருந்து போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்துகள் வாங்கிச் சாப்பிடாமல் அருகில் உள்ள அரசு அரம்ப சுகாதார நிலையம் மற்றும் தலைமை அரசுமருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்.

மாடிகளில் சின்டெக்ஸ் பயன்படுத்தும் வீடுகளில் தொட்டிகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து நீர் நிரம்பி வெளியேறும் குழாய்களிலும் ஏர் வால்வுகளிலும் கொசுக்கள் உள்ளே புகாதவாறு கொசுவலை துண்டினை கட்டப்படல் வேண்டும்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...