தென் இந்திய மக்களின் இட்லி, தோசையை மறக்கடிக்கும் ஜிஎஸ்டி வரி- சிஐஐ கூட்டத்தில் கிரைன்டர் உற்பத்தியாளர்கள் வேதனை

தென் இந்திய மக்களின் பிரதான காலை உணவாக இடம்பெருவது இட்லியும், தோசையுமே. ஆனால் தற்போது அந்த உணவிற்கு மிகப்பெரிய அழிவு வந்துள்ளது. காரணம் கிரைன்டர் மீதான 17 முதல் 28 சதவிகித ஜிஎஸ்டி வரி உயர்வு. 



கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் சிஐஐ சார்பில் உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிவில் ஏவியேஷன் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பங்கேற்று ஜிஎஸ்டி மீதான மக்களின் புரிதல் குறித்து விளக்கவுரையாற்றினார்.

இக்கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிரைன்டர் உற்பத்தியாளர்கள், ஜிஎஸ்டி உயர்வால் மக்களும், உற்பத்தியாளர்களும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறினர்.



இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற உற்பத்தியாளர் குறைதீர் கூட்டத்தில், கிரைன்டர் உற்பத்தி மீது 17 முதல் 28 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 5 சதவிகிதம் மாநில அரசிற்கும், 12.12 சதவிகிதம் மத்திய அரசிற்கும் செல்கிறது என கூட்டத்தில் பங்கேற்ற உற்பத்தியாளர் அசோசியேஷன் உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், கோவையில் ஏராளமான கிரைன்டர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் கோவையிலேயே கிரைன்டர் உற்பத்தி அதிகளவில்  உள்ளது. இந்நிலையில், இந்த வரி உயர்வானது உற்பத்தி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது. எனவே, 17 முதல் 28 சதவிகித வரியினை 12 சதவிகிதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

மேலும், உற்பத்தியாளர்கள், தங்களின் உற்பத்தி தொடர்பான அனைத்துக் கோரிக்கைகளையும் வரும் ஆகஸ்ட் 4ம் தேதியன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, சிவில் ஏவியேஷன் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறுகையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி என்பது உற்பத்தியினை மட்டுமே சார்ந்தது அல்ல. கல்வி, மருத்துவம் என அனைத்தைம் மேம்படுத்தும் நோக்கில் உயர்த்தப்பட்டுள்ளது. 



மேலும், பிற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் ஜிஎஸ்டி வரியானது குறைவானதே என அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...