கோவை பொள்ளாச்சி சாலையில் மீண்டும் துவங்கியது பேருந்துகளுக்கிடையேயான போட்டி

கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கும் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடந்துtU;k சூழலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அசுர வேகத்தில் போட்டி போட்டுக்கொண்டு செல்வதால் சாலையில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு பொள்ளாச்சி சாலையில் சென்றது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து போக்குவரத்து துறையினர் சம்பந்தப்பட்ட அந்த இரு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி உதவி ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வேகமாக சென்ற ஏழு பேருந்துகளை பிடித்து அபராதம் விதித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஓரிரு நாட்கள் மட்டும் குறைவான வேகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை போல் மீண்டும் தற்போது உடுமலை, பழனி செல்லும் பேருந்துகள் கிணத்துக்கடவு பகுதியை தாண்டியவுடன் அதிவேகமாக இயக்குவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலை தொடர்ந்தால் பேருந்தில் பயணிக்கும் மக்களின் உயிர்க்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை ஏற்படும். ஆகவே வேகமாக செல்லும் பேருந்துகள் மீது அரசியல் தலையீடுகளை தவிர்த்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்திரவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...