ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் திருடுவதை தடுக்காவிட்டால் குடும்ப அட்டை திருப்பி அளிக்கப்படும்- ஆட்சியரிடம் மக்கள் புகார்


பணப்பாளையம்புதூரில் ஆழ் குழாய் கிணறு அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டையை திருப்பி அளிக்க போவதாக அப்பகுதி பொதுமக்கள் எச்சரித்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா பணப்பாளையம்புதூர், செம்மனாம்பாளையம் மற்றும் அருகில் வசித்து வரும் 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர்.

அதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளியங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறோம். அத்திகடவு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் நீரை இந்த பகுதி மக்கள் உபயோகித்து வந்தோம். தற்போது தாங்கள் வசித்து வரும் பகுதியின் அருகே சிலர் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருவதால் மேற்குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. உடனடியாக இப்பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தங்களது குடும்ப அட்டைகளை திருப்பிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.



இதேபோல் தண்ணீர் திருட்டால் விவசாயம் அழிந்து வருவதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகக் கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...