தமிழகத்தில் கலவரம் நடக்க வாய்ப்புள்ளது என்றே கூறினேன்- பொன்.ராதா கிருஷ்ணன்


இந்து இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் தாக்கப்பட்டால் காவல்துறை நடவடிக்கை போதுமானதாக இல்லை என்ற உணர்வு தொண்டர்களிடையே மேலோங்கி வருகிறது. தமிழகத்தில் கலவரம் நடக்கும் என நான் கூறவில்லை, கலவரம் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்றே கூறினேன் என கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கொடநாடு எஸ்டேட்டில் நடக்கும் சம்பவங்கள் மர்மமாக இருப்பதால் அது குறித்த சிறப்பு விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் இந்து மத தலைவர்கள் தாக்கப்படுவதால், கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மட்டுமே கூறினேன். கலவரம் ஏற்படுத்த சொல்லவில்லை. 

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என கூறி பாஜக-வினர் தமிழகம் முழுவதும் பணம் வசூலிப்பது சரியா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, தனது ஊரிலேயே தனது பெயரை சொல்லி மோசடிகள் நடந்துள்ளது. உண்மையான பாஜக தொண்டன் இது போன்ற மோசடிகளில் ஈடுபட மாட்டான் என்று கூறினார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு அடக்குமுறை சட்டம் கொண்டு வருவது அந்நாட்டு அரசியலுக்கு சரியாக வரும். மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அனுக வேண்டும் என பிரதமர் இலங்கையை வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது தமிழக மீனவர்களை இந்த சட்டம் பாதிக்காது. 

இந்தியா அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருக்க விரும்புகிறது. எதிர்க்கும் நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பண்டித் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கட்சியை வளர்க்க பாஜக-வினர் நாடு முழுவது சுற்றுப்பயணம் மேற்கொள்கின்னர். அதன் ஒரு பகுதியாக இன்று நீலகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். 

தமிழகத்தில் 11 ஆயிரம் பேர் கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் உருவாகும் என நான் நம்புகிறேன். 60 சதவிகிதம் சுற்றுலா தளங்களில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை மேம்பாடு செய்ய வேண்டும். அதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்ஹப அவசியம். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மக்களுக்கு தொடர்ந்து சந்தேகம் ஏற்படுவது அரசுக்கு நல்லது இல்லை. பெரிய சந்தேகத்திகுரிய இடமாக மாறி வரும் கொடநாடு விவகாரம் குறித்து விளக்கம் கொடுக்கும் வகையில் விசாரணை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...