மதுக்கரையில் முறைகேடாக விற்கப்படும் மதுபானங்கள்- பொதுமக்கள் அவதி

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், பார்களையும் கடந்த மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் இவ்வாறாக செயல்பட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டன. மேலும், பல கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் மாற்றப்பட்டன. இந்நிலையில், சிலர் மதுபானங்களை முறைகேடாக விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக, கோவை மாவட்டம், மதுக்கரைக்கு உட்பட்ட பகுதியில் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை, அதன் எதிரே உள்ள பெட்டிக் கடை உள்ளிட்டவற்றில் மதுபானங்கள் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்புறம் மூடிய நிலையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையின் பின் வாசல் பகுதியிலும், அருகிலும் சிலர் முறைகேடாக மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த மதுக்கடையின் எதிரே உள்ள பெட்டிக் கடையிலும், சிலர் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் சாலையிலும் அமர்ந்து மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி, அதற்கு மேலும் விற்பனை நடைபெறுவதாகவும், மதுக்கடையினை விட வெளியில் கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் மதுகுடிக்க வருவோரால் அன்றாடம் பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. தொடர்ந்து, இதுபோன்ற முறைகேடான மதுபான விற்பனை நடைபெற்றால் அடுத்தகட்டமாக மாவட்ட காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்படும்' என தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...