கோஷ்டி மோதலில் இந்து முன்னணியின் நிர்வாகி படுகாயம்: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவை ஆலந்துரையை அடுத்த பூலுவபட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று மாலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாலிபால் போட்டியில் பங்கேற்றனர். தொடர்ந்து நண்பர்களின் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டுள்ளது.

அப்போது சிவா (50) என்பவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிவா-வின் மகன் சுரேந்திர குமார் (25) தனது நண்பரும், இந்து முன்னணியின் மாநகர மாவட்ட செயலாளருமான ரமேஷ் குமார் (29) என்பவருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரமேஷ் குமார் அப்பகுதியைச் சேர்ந்த சுமன் (34) என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மரக்கட்டையால் ரமேஷ்குமார் பலமாக தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார். 

தகவலறிந்த இந்து முன்னணியினர் சம்பவ இடத்திற்கு சென்று தாக்குதல் நடத்தியதில் சுமனும் படுகாயமடைந்தார். தொடர்ந்து, இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...