பெண்களுக்கு சமமான மரியாதையை வழங்க வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் நீதிபதி குரியன் ஜோசப் பேச்சு


கோவை, ஆலந்துறையை அடுத்துள்ள காருண்யா பல்கலைக்கழகத்தின் இன்று 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பெண்களுக்கு சமமான உரிமையும், மரியாதையும் வழங்கப்பட்டால் மட்டுமே சீரான சமுதாயம் உருவாகும் என தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் அவர் பேசுகையில், இளைஞர்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், அனைவரையும் சகோதரர்களாக மதிப்பதுடன் இயற்கை வளங்களை காப்பற்றுவதில் கவனம் கொள்ள வேண்டும் என்றார். நமது முன்னோர்களை விட தற்போதைய சமுதாயத்தினருக்கு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் அதனை முழுமையாக இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். தவறுகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளுதல் அவசியம் என்றார்.

மேலும், நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் சாசனம் மற்றும் அதன் சட்டத்தையும் இளைய சமுதாயம் முழுமையாக கற்றுக்கொள்வதுடன், அதனை சமுதாய மேம்பாட்டிற்கு செயல்படுத்தவும் முன்வர வேண்டும் என்று கூறினார். இந்தியாவில் மனித வளமும், தரமும் அதிகரித்து வருவதால் தேடுதல் மூலம் விடா முயற்சியால் வெற்றிப்பெற இளைய சமுதாயத்தினர் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார். இந்திய சாசனம் வழங்கியுள்ள சம உரிமை, பேச்சுரிமை, வாழும் உரிமை பங்கம் ஏற்படும் வகையில் செயல்படுவர்களுக்கு எதிராக கடுமையான குரல் கொடுக்க வேண்டும் எனக் கூறினார். 

பின்னர், பல்கலையில் பட்டம் பயின்ற 1886 மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், துனை வேந்தர் ஜேம்ஸ் மற்றும் அறங்காவலர் ஸ்டெல்லா தினகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...