திமுக சார்பில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி பட்டறை துவக்கம்

கோவை திமுக சார்பில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி பட்டறை கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக அமைப்புச் செயலாளரும், பாராளுமன்ற நியமனக்குழு உறுப்பினருமான எஸ்.ஆர் பாரதி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனவும், மத்தியில் ஆளும் பாரத ஜனதா கட்சி எப்போது வேண்டுமானாலும் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க நேரிடலாம் எனக் கூறினார். மேலும் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் அஇஅதிமுக ஆட்சியை பாரத ஜனதா கட்சி கட்டுபாட்டுடன் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டயுள்ளார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கொடநாட்டில் நடைபெற்ற சம்பவங்களை மறைப்பதற்காக பாரத ஜனதா கட்சி தமிழகத்தில் டி.ஜி.பி ராஜேந்திரனை பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறினார். இதற்கு எதிராக திமுக சார்பில் உயர்தீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை விரும்பி, கோவை மாநகர வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...