சிம்ப்ளிசிட்டி செய்தி எதிரொலி: பொது இடத்தில் மது அருந்திய நான்கு பேர் மீது வழக்கு

நெடுஞ்சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கோவையின் முக்கிய இடங்களில் இருந்த பல்வேறு டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. 



இதனால், ஊருக்கு நடுவே இருக்கும் டாஸ்மாக் பார்களுக்கு படையெடுத்த மது பிரியர்கள் பொது இடங்களிலேயே வைத்து மதுவை அருந்துவதும் பின்னர் காலி பாட்டில்களை சாலைகளில் எரிவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். 

ஜி.வி ரெசிடென்சி சந்திப்பில் இருக்கும் டாஸ்மாக் பார் முன்பு உள்ள காலி மைதானத்திலும், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் பலர் கூட்டாக அமர்ந்து மது அருந்துவதோடு, கண்ணாடி பாட்டில்களை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வீசிச்செல்வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியதையடுத்து சிம்ப்ளிசிட்டியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.



இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சிங்காநல்லூர் போலீசார் அப்பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது ஜி.வி.ரெசிடென்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமர்ந்து மது அருந்தி வந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, மசக்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (36), சிவக்குமார் (37), சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (40) மற்றும் சுரேஷ் (35) ஆகிய நான்கு பேர் மீது பொது இடத்தில் மது அருந்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...