கிராமபுர மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் - உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு கோவை அரசு மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு

கிராமபுர மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு கோவை அரசு மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது. 

கிராமபுர மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டினை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமபுர மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும். மற்றும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து  தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கோவை மாவட்ட மருத்துவர்கள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் அரசு மருத்துவ சங்க தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், மருத்துவர்களுக்கு பெரிதும் உதவிய தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்தனர்​.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...