பொறியியல் கல்லூரி மாணவர்கள் அறையில் வெடிபொருட்கள்- காவல்துறையினர் விசாரணை



கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறையில் வெடி பொருட்கள் இருந்ததால், அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அடுத்துள்ள கோவைபுதூரில் ஏராளமான மாணவர்கள் கல்லூரி அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இதில், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் பொறியியல் மாணவர்களும் இவ்வாறான வீடுகளில் தங்கியிருந்த நிலையில், அவர்களது வீட்டிற்கு புதிது புதிதாக சில நபர்கள் வந்து சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதீ காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு விசாரணைக்காக காவல்துறையினர் வந்த நிலையில்,காவல்துறையினரைக் கண்ட  நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்ட போது, பெரிய அளவிலான பட்டாசுகள் ஒரு பையில் நிறைய இருப்பதும், அவற்றின் மேலே வெடி பொருட்கள் போல கயிற்றில் சுற்றி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்த குனியமுத்தூர் காவல்துறையினர் அறையில் தங்கி இருந்த 3 பொறியியல் மாணவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பொருட்கள் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் துறையினரிடம் சோதனைக்காக அனுப்பப்பட்டதை தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...